தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து நாட்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என்று உணவுத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் முன்கூட்டியே பொருள்கள் வாங்குவதால் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது