நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. மக்கள் பலரும் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதால் தீபாவளி மறுநாள் திங்கட்கிழமை வருவதால் விடுமுறைக்கு சென்றவர்கள் திரும்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் நவம்பர் 13ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.