தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7:00 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் எனவும் நீதிமன்ற உத்தரவுபடி தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தீபாவளி என்று காற்றின் தரம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.