சித்தூர் மாவட்டத்தில் இன்று காலை பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. குடிபாலா மண்டலம் கொல்லமடுகு திருப்பதியில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் 22 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.