தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பாக செயல்படுத்தப்படும் அறிவியல் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் பேராசிரியர்கள் நிதி உதவி பெறுவதற்கு ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேளாண்மை அறிவியல், உயிரியல் சுற்றுச்சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம், இயற்பியல் மற்றும் வேதியல், சமூகவியல் மற்றும் கால்நடை அறிவியல் போன்ற பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட துறைகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்களுக்கு ஆய்வு மேற்கொள்ள இரண்டு ஆண்டு காலத்திற்கு 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும். திட்ட வரைவுகளில் நான்கு நகல்கள், உறுப்பினர் செயலர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தொழில்நுட்பக் கல்வி இயக்க வளாகம் சென்னை 600 025 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.