நாடு முழுவதும் வருகின்ற மார்ச் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது. பிறந்த குழந்தை முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவது கட்டாயமாகும்.

அதனால் அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மார்ச் மூன்றாம் தேதி தவறாமல் இந்த போலியோ சொட்டு மருந்து முகாமை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு முகாமுக்குச் சென்று போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.