அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்று நேற்று முதல் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பலரும் ராமர் கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

ராமர் கோவிலில் நிறுவப்பட்டுள்ள சிலை கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ் என்ற சிற்பி வடிவமைத்தது. இந்நிலையில் அருண் யோகிராஜின் மனைவி கூறுகையில் “எங்கள் வீட்டை எல்லோரும் கோவில் என்று கூறுகிறார்கள். பலரும் எங்களை அன்புடன் ஆசீர்வதிக்கிறார்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.