அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்று நேற்று முதல் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பலரும் ராமர் கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் குரங்கு ஒன்று கோவிலின் கர்ப்பகிரகத்திற்குள் நுழைந்து ராமரின் அருகே சென்றுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “பாதுகாவலர் எங்களிடம் குரங்கு கர்ப்பகிரகத்திற்குள் சென்றதாக கூறினார். இது அனுமான் அவர்களே ராமரை பார்க்க வந்ததாக தோன்றுகிறது” என பதிவிட்டுள்ளனர்.