அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்று நேற்று முதல் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பலரும் ராமர் கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த ஸஸ்வத் ரஞ்சன் என்பவர் 936 தீக்குச்சிகளை வைத்து 14 இன்ச் அளவில் அயோத்தி ராமர் கோவிலை உருவாக்கியுள்ளார். இதனை மோடி அவர்களுக்கு கொடுக்க விரும்புவதாகவும் இதற்கு யாராவது உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.