சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி காமனேரி பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம்-தர்மபுரி பைபாஸ் ரோட்டில் பெயிண்ட் குடோன் வைத்துள்ளார். நேற்று காலை இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஒரு பேரல் வெடித்ததாக தெரிகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அரசு அனுமதியுடன் குடோன் வைக்கப்பட்டு இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.