நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேடு சிந்தாமணி காடு பகுதியில் வேம்படி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி வேப்பமரத்திற்கும் அரச மரத்திற்கும் திருமணம் நடைபெற்றது. முன்னதாக அரச மற்றும் வேம்பு மரங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

இந்நிலையில் அரச மரத்தை ஆணாகவும், வேப்ப மரத்தை பெண்ணாகவும் பாவித்து மாங்கல்யம் சூட்டும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வேம்பு மற்றும் அரச மரங்களின் திருமணத்தில் பங்கேற்றால் திருமண தடை உள்ள பெண்களுக்கு எளிதில் திருமணம் நடைபெறும் என்பதால் ஏராளமான இளம் பெண்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.