இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரிடத்து வருகிறது. அரசு குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வந்தாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. தற்போது பெண்களுக்கு மேலும் ஒரு புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது.

மால்கள், கடைவீதிகள் என பொது இடங்களில் பெண்களுக்கே தெரியாமல் அவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அவற்றை சமூக வலைத்தளங்களில் ஒரு கும்பல் விற்று வருகிறது. UPI மூலம் பணம் பெற்று படங்களை விற்கின்றனர். சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.