சுயமாக தொழில் செய்து பொருளாதாரத்தில் நிலைத்திருக்க விரும்பும் பெண்களுக்காக மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேற்பார்வையில் உத்யோகினி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் கிடைக்கும்.

மாற்றுத்திறனாளி மற்றும் கணவனை இழந்த பெண்கள் தகுதியின் அடிப்படையில் மூன்று லட்சத்திற்கும் மேல் கடன் பெறலாம். 18 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இதற்கு தகுதி உடையவர்கள் எனவும் கிரெடிட் மற்றும் சிபில் ஸ்கோர் நன்றாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வங்கிகளை தொடர்பு கொள்ளலாம்.