தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு டிக் எனப்படும் தமிழக அரசின் தொழில் முதலீட்டு கழகம் மூலமாக சிறப்பு கடன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சமாக மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

இதற்கு ஆறு சதவீதம் வட்டி ஆகும். இந்த நிலையில் சிறப்பு கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது சிறப்பு கடன் திட்டத்தை பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.