பேங்க் ஆப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பெண்களுக்கு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவர்களுக்காக நாரி சக்தி என்ற பெயரில் சிறப்பு சேமிப்பு கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மொத்தமாக சம்பாதிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை தனிநபர் விபத்து காப்பீடு, ஆரோக்கிய பொருட்கள் மீதான தள்ளுபடி, லாக்கரில் தங்கம் வைப்பதில் சலுகை மற்றும் கிரெடிட் கார்டு சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. எனவே விருப்பம் உள்ளவர்கள் இதில் சேர்ந்து பயனடையுங்கள்.