சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும், இரவு நேரங்களிலும் ஆர்பிஎப் காவல்துறையினர் பணியில் இருப்பார்கள் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 26 ரயில் நிலையங்களில் சிசிடிவி அமைக்கும் பணி நடைபெறுகிறது என என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து தாம்பரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதை நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு நாளைக்கு 60க்கும் மேற்பட்ட போராட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.