கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏற்படும் டிராபிக் பிரச்சனையை சரி செய்வதற்காக 190 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்க உள்ளதாக துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பெங்களூரில் டிராபிக் பிரச்சனையை சரி செய்ய சுரங்கப்பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 45 நாட்களுக்குள் பொது டெண்டர் விடப்பட உள்ளது. சுரங்கப்பாதை காண பட்ஜெட் அதிகம் என்பதால் பல வழிகளில் நிதி திரட்ட வேண்டியுள்ளது. மத்திய அரசின் உதவியும் கேட்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.