எதிர்க்கட்சியாக இருக்கும் தாங்கள் எப்படி பாஜகவை எதிர்க்க முடியும் என்று எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் பேசி இருந்தார். ஆனால் ஆளும் கட்சியாக இருக்கும் போது பாஜகவின் அனைத்து சட்டங்களுக்கும் அந்த புலி பாண்டி, எலி பாண்டியாக மாறி ஆதரவு அளித்தார்.

ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள் விரோத சட்டத்திற்கு எதிராக போராடினோம். இப்போது ஆளுங்கட்சியாக ஆளுநரின் அத்துமீறல்களை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றி கண்டுள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.