திருச்சி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்தால் நகர செயலாளருக்கு இன்னோவா காரும் வட்டச் செயலாளருக்கு 5 சவரன் தங்கச் சங்கிலியும் வழங்கப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். திருச்சியில் புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞரான கருப்பையா என்பவருக்கு எடப்பாடி பழனிச்சாமி வாய்ப்பு வழங்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக விஜய் பாஸ்கர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.