புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியான ரமாதேவி இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக, திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமானின் தம்பி மனைவி ஆவார். புதுக்கோட்டை மக்களுக்கு ரமாதேவி பல உதவிகள் செய்துள்ளதால், அவரின் மறைவு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.