டாஸ்மாக் சில்லறை வணிகக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையிலான கணக்கின் படி 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவை படிப்படியாக குறைக்கப்படும். மேலும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். அதே போல மேற்பார்வையாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.1,100 தொகுப்பூதியம் உயர்த்தப்படும் என்றார்.