திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் ஏப்ரல் 24-ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. அதாவது எம்ஜிஆர் பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் அதிமுகவின் 51-வது ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. இந்த முப்பெரும் விழாவை முன்னிட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருது அழகுராஜ் பேசியதாவது, எப்போதெல்லாம் அநீதி தலை தூக்குகிறதோ அப்போது சினிமாவில் ராஜ்கிரன் வேட்டியை மடித்துக் கொண்டு வருவது போல அண்ணன் ஓபிஎஸ் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு நிற்கிறார். இபிஎஸ் என்ற துரோகியை  பற்றி பேசுவதற்கு 2 பேர் இருந்தால் ஓபிஎஸ் என்ற உத்தமரை பற்றி பேசுவதற்கு 4 பேர் இருக்கிறார்கள். மேலும் இபிஎஸ் செய்த துரோகத்தை பற்றி வெளியில் சொல்லும் நாள் ஏப்ரல் 24-ம் தேதி என்று கூறினார்.