நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அருகே கோடியக்காடு ஊராட்சியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கியுள்ளார். இதில் துணைத் தலைவர் சரவணன், ஆசிரியர் பயிற்றுனர் அருள்மணி வள்ளி, தலைமை ஆசிரியர் நீலமேகம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக் குமார் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் எழுத்தறிவு இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.