23 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொந்திர ரெட்டிபாளையம் மதுவிலக்கு சோதனை சாவடியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்த ராகவன் என்பவர் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிளியனூர் சோதனை சாவடி ஏட்டு துரைக்கண்ணு நல்லான்பிள்ளை காவல் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதே சோதனை சாவடியை சேர்ந்த ஏட்டு சக்திவேல் அனந்தபுரம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். ஏட்டு செந்தில்குமார் மாவட்ட குற்ற ஆவணங்கள் பதிவேடுகள் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். இதுபோல மொத்தம் 23 போலீசார் மாவட்டத்திற்குள் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கின்றார்.