மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுபட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றுள்ளது. பழைய அந்தோனியார் ஆலயத்தில் வைத்து நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 500-க்கும் மேற்பட்ட கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் மாடு முட்டி சப் இன்ஸ்பெக்டர் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் 35 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் தேவகோட்டை அருகே திட்டுகோட்டை என்னும் பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.