பிறந்து 21 நாட்களை ஆனா குழந்தையை தாய் ஒருவர் மற்றொரு பெண்ணிடம் நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த ரூபாலி மெண்டல் என்பவர் தன்னுடைய பச்சிளம் குழந்தையை ரெயில் காலனியை சேர்ந்த பெண்ணுக்கு விற்றதாக அனந்த்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கடந்த ஜூலை 31ஆம் தேதி கைது செய்தனர். மேலும் பணம் கொடுத்த குழந்தையை வாங்கிய அந்தப் பெண்ணுக்கு 15 வருடங்களாக குழந்தை இல்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.