போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே பீகாரில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இம்மாதம் 27ஆம் தேதி மரணம் நிகழ்ந்தது. இதற்கிடையில், இறப்பதற்கு சற்று முன்பாக நடிகை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக பகிர்ந்துள்ள வார்த்தைகள் விவாதப்பொருளாகியுள்ளது. அதில், சரியான வாய்ப்புகள் அமையாததால் என் வாழ்க்கை எனும் படகு மூழ்கிவிட்டது. இதனால் வாழ்க்கையே முடங்கிவிட்டது. கடும் மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

கடந்த 27ஆம் தேதி, மதியம் 3:30 மணியளவில் நடிகை அம்ரிதாவின் அறைக்கு அவரது சகோதரி வந்தபோது, ​​ தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அமிர்தா பாண்டேவின் மரணம் குறித்து ஜோக்சார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.