கவிஞர் வைரமுத்துவை திரைத்துறையில் தூக்கிவிட்டது தானும், இளையராஜாவும்தான் என இயக்குநர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். மனிதர்களுக்கு நன்றி வேண்டும் என வைரமுத்துவை காட்டமாக விமர்சித்த அவர், இளையராஜா இல்லையெனில் வைரமுத்து ஜீரோ என்றார். வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது எனக் கூறிய அவர், இசைக்கு பாட்டா? பாட்டுக்கு இசையா? என அவர் எப்படி கேட்கலாம் என்றார்