தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வரும் நிலையில் நடிகை கீர்த்திக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் அடிக்கடி நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண வதந்திகள் பரவி வருகிறது. இதற்கு முன்னதாக அவர் அரசியல்வாதி மகன் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக வதந்திகள் பரவியது‌. இதைத்தொடர்ந்து அவர் துபாயில் நண்பர் ஒருவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட போது அவரைத்தான் கீர்த்தி திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று வதந்திகள் பரவியது.

இந்த வதந்திகளுக்கு கீர்த்தி சுரேஷின் பெற்றோர் முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவரின் மகனுடன் தற்போது கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷும்  அவரும் 13 வருடங்களாக பழகி வருவதாகவும் தற்போது பெற்றோர் சம்பந்தத்துடன் திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக நடிகை கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.