தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் பல படங்களில் நடித்து வரும் நிலையில் அடிக்கடி சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை யாஷிகா விபத்து ஒன்றில் சிக்கிக்கொண்ட நிலையில் தன் உடல்நலம் தேறிய பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதால் விபத்துக்கு பிறகும் அவர் அழகாக இருப்பதற்கு காரணம் அறுவை சிகிச்சை தான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து  வருகிறார்கள். அவர் அழகை மெருகேற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதற்கு தற்போது நடிகை யாஷிகா விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர் நான் என்னுடைய அழகை மெருகேற்ற எந்த ஒரு அறுவை சிகிச்சையும் செய்யவில்லை என கூறியுள்ளார்.