பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பரினிதி சோப்ரா. இவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை ஆவார். இந்நிலையில் நடிகை பரினிதி சோப்ரா தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு இருக்கும் திறமைக்கு நான் எப்போதோ சினிமாவில் உயர்ந்த இடத்திற்கு சென்று இருக்க வேண்டும். சினிமாவில் உயர்ந்த இடத்திற்கு செல்வதற்கு திறமை மட்டும் இருந்தால் போதாது.

அதற்கு பிரபலங்களுடன் நட்புறவில் இருக்க வேண்டும். அவர்கள் அழைக்கும் போதெல்லாம் பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டும். பார்ட்டிகளுக்கு சென்றால்தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் பார்ட்டிகளுக்கு சென்றால் பட வாய்ப்புகள் கிடைக்கிறது என்பது உண்மை. திறமைக்கு மட்டும் வாய்ப்பு கொடுங்கள் என்று நான் தற்போது தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் கேட்டு வருகிறேன். நான் கொலை செய்யப்பட்ட பிரபல பஞ்சாபி பாடகர் அமர் சிங் வாழ்க்கை படத்தில் நடித்தேன்‌. அந்தப் படத்திற்காக 30 கிலோ வரை எடை குறைத்தேன். மேலும் இந்த படத்தில் நடித்ததற்காக எனக்கு பாராட்டுகள் கிடைத்தது என்று கூறியுள்ளார்.