இந்த வருடம் இந்திய தலைமையில் ஜி20 மாநாடு நடைபெறுகின்றது, செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வைத்து உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என பல தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இதில் கலந்து கொள்வார் என தெரியவந்துள்ளது. இது குறித்து வங்கதேச துணை உயர் ஆணையர் அந்தலிப் எலியாஸ் கூறுகையில் “பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே இருதரப்பு சந்திப்பு நிகழும் என்று நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.