கேரளாவில் பிரதமர் மோடியை பார்க்கச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி நேற்றிரவு கொச்சி சென்றார். இந்நிலையில், வடுகலாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மோடியை பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அங்கு, தடுப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிறு கழுத்தில் சிக்கி படுகாயமடைந்த அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்