5வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவாவின் வாஸ்கோ நகரில் போலீசார் முராரி குமார் மற்றும் உபநேஷ்குமார் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். வாஸ்கோ நகரில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் அருகே சிறுமி சடலமாக கிடந்தார். பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. அப்போது அந்த இடத்தில் இருந்த 20 கட்டிட தொழிலாளர்களை போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் இரண்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். குற்றவாளிகள் இருவரும் முன்பு சிறுமியின் தாயை பலாத்காரம் செய்ய முயன்ற போது தந்தை வந்து காப்பாற்றியுள்ளார். இந்த நிலையில் சிறுமியை கடந்த வியாழக்கிழமை இரவு கடத்திச் சென்ற குற்றவாளிகள் கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தில் வைத்து பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் வாஸ்கோ நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு ஐந்து நாட்கள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.