தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா கோபாலபுரம் அருகில் இருக்கும் குளத்தில் இன்று ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டறியப்பட்டது. பிறந்து ஒரே நாளே ஆன தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் பிணமாக மிதந்து வந்த குழந்தையின் காட்சி பலரையும் கண்கலங்க  வைத்தது. குளத்தில் வீசுவதற்கு பதிலாக யாரிடமாவது கொடுத்திருக்கலாம் என கிராம மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.