இந்தியாவில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் கீழ் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் இருந்து 3093 மாணவர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் பயன்பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்குள் இருக்கும் மாணவர்கள் உதவித் தொகையை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு எட்டு மற்றும் பத்தாம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தகுதி உடைய மாணவர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://scholarships.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.