நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது வரை விவசாயிகளுக்கு 15 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 16 வது தவணை எப்போது வழங்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது.

தற்போது பிப்ரவரி 28ஆம் தேதி 2000 ரூபாய் விவசாயிகளில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விவசாயிகள் அனைவரும் KYC அப்டேட்டை கட்டாயம் முடித்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.