உத்திரபிரதேசம் மாநிலம் மெயின் புரி மாவட்டத்தில் உள்ள குஷ்மாரா சௌகி பகுதியில் சமீபத்தில் இளம் பெண்ணுக்கு ஒருவருடன் திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணம் முடிந்த அடுத்த நாள் மணமகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதனால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைத்தனர். ஆனால் திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளைும் பெண்ணும் நெருக்கமாக இருந்ததால் தான் குழந்தை பிறந்ததாக தெரியவந்தது.