உத்திரபிரதேசம் மாநிலத்தில் வேலை கிடைக்காததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவருடைய எல்லா படிப்பு சான்றிதழ்களையும் எரித்துள்ளார்.

இது தொடர்பாக தற்கொலை குறிப்பில், வேலை கொடுக்க முடியாத பட்டத்தால் என்ன பயன்? எங்கள் வாழ்நாளில் பாதி படிப்பிலேயே கழிந்து விட்டது. அதனால் இப்போது எங்கள் இதயம் நிறைந்திருக்கிறது, என்று எழுதி வைத்துள்ளார். இவருடைய தற்கொலைக்கு ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.