மருத்துவமனை பிணவறைகளில் 2008லிருந்து கேட்பாரற்று இருந்த 1,122 சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசுக்கு ரூ.3.66 கோடி வருவாய் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்கத் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சடலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு ரூ.40,000மும் பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு ரூ.20,000மும் நிர்ணயிக்கப்பட்டு பண்ணனும் வசூலிக்கப்பட்டுள்ளன.