CRPF- சிறப்பாக பணியாற்றாத காரணத்தால் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்தான் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஹனுமந்து ரமேஷ்(45). சொந்த ஊருக்கு வந்த அவர், இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஹனுமந்து தனது காதலிக்கு எஸ்.பி உடை வாங்கி கொடுத்து அதனை அணிந்துகொண்டு பணம் பறிப்பில்  ஈடுபட்டு வந்துள்ளனர்.

மேலும் வேலை வாங்கித்தருவதாக கூறி பல இளைஞர்களை ஏமாற்றியுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஹனுமந்த்திடம் விசாரித்ததில் அவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் இருப்பதும் 3வதாக இந்த காதலியை வைத்து பணப்பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.