புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை பா.ஜ.க நிறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம் என கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. தமிழக அரசியலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிலும் குறிப்பாக தற்போதைய இடைத்தேர்தலில் இக்கட்டான நிலை உருவாகியுள்ளது. இந்த சமயத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பொது வேட்பாளராக தேசிய கட்சியான பா.ஜ.க சார்பில் வேட்பாளரை நிறுத்தினால் அதை புதிய நீதி கட்சி வரவேற்கும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.