உலகப் புகழ்பெற்ற IKEA அறைகலன் தயாரிப்பு நிறுவனமானது தமிழ்நாட்டில் கால் பதிக்க ஆலோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. ஸ்வீடன் நிறுவனமான IKEA-வின் துணை சிஇஓ-வை டாவோஸில் தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசினார்.

அப்போது அந்நிறுவனத்துக்கு தேவையான மூலப்பொருட்களை தமிழகத்தில் கொள்முதல் செய்வது, விற்பனை வாய்ப்புகள் குறித்து விவாதம் செய்யப்பட்டது. ஆகவே கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.