அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் இருக்கும் பாரில் ஒரு நபர் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அந்த நபரை பாரை விட்டு வெளியேற்றி உள்ளனர். இதனால் கோபம் கொண்ட அந்த நபர் பாருக்கு தீ வைத்து விபத்து ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ஏழு ஆண்கள் நாலு பெண்கள் என 11 பேர் உயிரிழத்துள்ளனர்.

இது குறித்து அரசு வழக்கறிஞர் கூறுகையில், பெண்களை அவமரியாதையாக நடத்தியதற்கு வெளியேற்றப்பட்ட அவர் திரும்பி வந்து மொலோடோவ் காக்டைல் எனும் எரிபொருளை பாரின் மீது வீசி தீ விபத்து ஏற்படுத்தியுள்ளார். பயங்கர தாக்குதல் நடத்திய அந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.