தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் அரிதான ஒரு விஷயத்தை பார்க்க முடிகின்றது. அந்த வீடியோவில் நடுரோட்டில் இரண்டு நபர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சண்டை போடுவதை பார்க்க முடிகிறது. சிறிது நேரத்திற்கு பின் இந்த சண்டையில் காணப்படும் ஒரு விஷயம் நம் மனதை உலுக்கும் வண்ணம் இருக்கிறது.

சண்டைக்கு நடுவில் ஒருவர் திடீரென்று பாம்பு ஒன்றை வெளியே எடுத்து, அதை அடிக்கும் தடியை போல பயன்படுத்த தொடங்குகிறார். பிரம்பால் அடிப்பதை போன்று அவர் தன் எதிராளியை பாம்பால் அடிக்கிறார். சரியாக கூறவேண்டுமானால், அவர் பாம்பை ஒரு பெல்ட் போல பயன்படுத்தி அடிக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரையும் அப்புறப்படுத்தினர்.