விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் வனிதா ‌. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற வனிதா கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதன் பின் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர்.  இவர் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். தற்போது நடிகை வனிதா திரைப்படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை வனிதா முதல்முறையாக தெரிவித்துள்ளார். தனக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா என்கிற நோய் பாதிப்பு இருக்கிறது. இதனால் தன்னால் சிறிய இடங்களிலோ அல்லது பாத்ரூம், லிப்ட் போன்ற இடங்களிலோ அதிக நேரத்தில் இருக்க முடியாது. இதற்கு சிகிச்சை எடுத்து வருகிறேன். எனத் தெரிவித்துள்ளார். அவர் குணமடைய வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.