தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், செப்டம்பர் 24, 2025 அன்று காலை 7:00 மணியளவில் வஜிரா மருத்துவமனை அருகே சாம்சென் சாலையில் 50 மீட்டர் ஆழமுள்ள பயங்கர பள்ளம் தோன்றியது. இந்த திடீர் பள்ளத்தில் கார்கள், மின்சார கம்பங்கள் உள்ளிட்டவை விழுந்தன. அருகில் உள்ள ரயில் நிலைய கட்டுமானப் பணிகளால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், பள்ளம் தோன்றியதால் போக்குவரத்து முடங்கியதும், உடைந்த குழாய்களில் இருந்து தண்ணீர் பீய்ச்சியடிப்பதும், மின்சார கம்பிகள் ஆபத்தாக தொங்குவதும் தெளிவாகத் தெரிகிறது. பாதுகாப்பு கருதி, மருத்துவமனை நோயாளிகளும், அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளும் வெளியேற்றப்பட்டனர்.

பாங்காக் ஆளுநர் சாட்சார்ட் சித்திபுன்ட், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தினார். பாதுகாப்பு காரணங்களால், பகுதியில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்த பள்ளத்தை விரைவில் சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சூப்பர் டைஃபூன் ரகாசாவால் ஏற்பட்ட கனமழையால் பாங்காக்கில் இந்த விபத்து மோசமடைந்ததாகவும், இந்த புயல் அடுத்த சில நாட்களில் மீகாங் டெல்டாவை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.