தமிழகத்தில் மாதாந்திர சலுகை மற்றும் மாணவர் சலுகை பயண அட்டையை வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என எம்டிசி அறிவித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் பயணிகளின் நலனை கருதி இந்த முறை மாதாந்திர சலுகை மற்றும் மாணவர் சலுகை பயண அட்டை மற்றும் ஆயிரம் ரூபாய் பயண அட்டையின் விற்பனை வருகின்ற 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதனை பயன்படுத்திக்கொண்டு அனைத்து மாணவர போக்குவரத்து கழக மாதாந்திர பயண சீட்டு விற்பனை மையங்களிலும் வழக்கம் போல பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
பஸ் பாஸ் பெற கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“தனக்குத் தானே பிரசவம்”… குழந்தையின் கால்களை பிய்த்து கொன்ற நர்ஸ் சிறையில் அடைப்பு…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வினிஷா (24) என்பவர் சென்னை தி நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மதுரையைச் சேர்ந்த செல்வமணி என்பவருடன் பழக்கம்…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read more