தமிழகத்தில் மாதாந்திர சலுகை மற்றும் மாணவர் சலுகை பயண அட்டையை வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என எம்டிசி அறிவித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் பயணிகளின் நலனை கருதி இந்த முறை மாதாந்திர சலுகை மற்றும் மாணவர் சலுகை பயண அட்டை மற்றும் ஆயிரம் ரூபாய் பயண அட்டையின் விற்பனை வருகின்ற 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதனை பயன்படுத்திக்கொண்டு அனைத்து மாணவர போக்குவரத்து கழக மாதாந்திர பயண சீட்டு விற்பனை மையங்களிலும் வழக்கம் போல பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.