தமிழகத்தில் மக்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்றிலிருந்து பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் கிடைக்காதவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதேசமயம் விரல் ரேகை பதிவு மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது. கைவிரல் ரேகை படியாதவர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டு அவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசு பெறுவதற்கு இன்று கடைசி நாள் என்பதால் டோக்கன் வாங்காதவர்கள் உடனடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்ற அனைவரின் மொபைல் எண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ள நிலையில் நீங்கள் பரிசு தொகுப்பை வாங்காமல் உங்களுடைய மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வந்திருந்தால் உடனடியாக புகார் அளித்து பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.