தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரேஷன்கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை வரை பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது டோக்கன் பெறாத ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை பெறுவதற்கு இன்று கடைசி நாள் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

ரேஷன் கடை ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை உள்ளதால் இன்றுடன் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் நிறைவடைகின்றன. எனவே இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் உடனே சென்று ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளுங்கள்.